Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

எலிகளை கொல்ல கூடுதல் ஊழியர்கள் நியமனம்

Print PDF

தினகரன்              02.11.2010

எலிகளை கொல்ல கூடுதல் ஊழியர்கள் நியமனம்

மும்பை, நவ.2: எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி, புறநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் எலிகளை கொல்வதற்காக 183 ஊழியர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தற்போது மும்பை நகர பகுதியில் எலிகளை கொல்ல 44 ஊழியர்கள் உள்ளனர். இதை புறநகர் பகுதிக்கும் விரிவு படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. புறநகர் பகுதிகளுக்காக ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக மாநகராட்சியின் பூச்சிகள் அழிப்பு இலாகா சமர்ப்பித்த திட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனர் சுவாதீன் ஷத்திரியா ஒப்புதல் அளித்து இருக்கிறார். நிலைக்குழுவின் அனுமதி கிடைத்ததும் புறநகர் பகுதியில் எலிகளை கொல்ல ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இரவு நேரத்தில் எலிகளை கொல்வதற்காக நியமிக்கப்படும் ஊழியர்கள் தினசரி குறைந்தது 30 எலிகளை கொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு நாளில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தால் அடுத்த நாள் இரவில் கூடுதல் எலிகளை கொன்று இதை சரி செய்துவிட வேண்டும். கொல்லப்பட்ட எலிகள் பரேலில் உள்ள ஹாஃப்கின் இன்ஸ்டிடியூட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கருவியில் வைத்து எரித்து சாம்பலாக்கப்படும்.

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை வருடத்துக்கு 10 சதவீதம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் மும்பையில் உள்ள வார்டில்தான் (மதன்புரா, நாக்பாடா, லேமிங்டன் ரோடு, தார்டுதேவ்) அதிகபட்சமாக கடந்த 2005ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடையே மொத்தம் 1.86 லட்சம் எலிகள் கொல்லப்பட்டுள்ளன. ‘பிவார்டு (மஜீத், நல்பஜார்) இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதே காலகட்டத்தில் இந்த பகுதியில் 1.47 லட்சம் எலிகள் கொல்லப்பட்டன.

இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரையில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 509 எலிகள் கொல்லப்பட்டிருப்பதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 5 இடங்களில் இருப்பதாக நகராட்சி கூட்டத்தில் புகார்

Print PDF

தினகரன்                02.11.2010

ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 5 இடங்களில் இருப்பதாக நகராட்சி கூட்டத்தில் புகார்

விருதுநகர், நவ. 2: ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 5 இடங்களில் இருப்பதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

விருதுநகர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் கார்த்திகா, துணைத்தலைவர் காசிராஜன் தலைமையில் ஆணையர் ஜான்சன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் சுபேதா, ஜெயக்குமார், மாரியப்பன் ஆகியோர் பேசுகையில்:

ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தனியார் தொழிற்சாலை நகராட்சியின் அனுமதியின்றி இயங்கி வருகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற் சாலை லைசென்ஸ் இல்லாமல் இயங்க அனுமதிக்கக்கூடாது.

இந்த தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையால் ரயில் நிலையம் வரை கடும் பாதிப்பு ஏற்படுகிறது. நகராட்சி அனுமதியின்றி இயங்கி வரும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்Ó என்றனர்.

கவுன்சிலர் கார்த்திகேயன் பேசுகையில், "ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. 33 வது வார்டை சேர்ந்த ஞானகுமார் என்பவரது படம் ஒரே பக்கத்தில் தொடர்ச்சியாக 5 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இதேபோல் புதிதாக அடையாள அட்டைக்காக படம் எடுத்த ஏராளமானோருக்கு இதுவரை அடையாள அட்டை வராதநிலை தொடர்கிறது. இதனால் தேர்தலில் ஓட்டு போடு முடியாதநிலை உருவாகிவிடும்Ó என்றார்.

ஆணையர் ஜான்சன் பேசுகையில், "தேர்தல் கமிஷன்தான் இதனை சரிசெய்ய வேண்டும்Ó என்றார்.

கவுன்சிலர் ஆறுமுகம்: தேர்தல் கமிஷன் கூட்டங்களுக்கு ஆணையர்தான் செல்கின்றனர். அப்போது இதை தெரிவித்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும்Ó என்றார். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.

 

ஈரோட்டை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக்க நடவடிக்கை

Print PDF

தினகரன்              02.11.2010

ஈரோட்டை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக்க நடவடிக்கை

ஈரோடு, நவ.2: ஈரோடு மாநகராட்சியை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சவுண்டையா பேசினார்.

ஈரோடு மாநகராட்சியில் நேற்று உள்ளாட்சிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. மேயர் குமார்முருகேஷ் தலைமை தாங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சவுண்டையா பரிசு வழங்கி பேசியதாவது:

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக 5 ஆண்டுகளில் குடிநீருக்காக பலகோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. திட்டத்தில் சிறு, சிறு குறைபாடுகள் இருந்தாலும் அனைத்து திட்டங்களுமே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நகராட்சி, மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆயிரம் கோடி ரூபாயை தமிழக முதல்வர் அறிவித்து அதற் கான ஆணையை வழங்கியுள்ளார். ஜனவரி மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் போன்ற பணிகளுக்காக 460 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் ரூ.250 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 12,623 ஊராட்சி, பேரூராட்சிகள், மாநகராட்சிகளில் எவ்வித பாரபட்சமும் இன்றி மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு மற்றும் வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் வீடு கட்ட குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த மாநகராட்சியை தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

மாநகராட்சியின் பணி களை விளக்கிடும் வகையில் பேரணி நடந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி பிரப்ரோடு, மேட்டூர்ரோடு வழியாக வ..சி.பூங்காவை சென்றடைந்தது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பள்ளி குழந்தைகள், மாநகராட்சி பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நேற்று மாநகராட்சி சார்பில் நடந்த உள்ளாட்சிகள் தினவிழாவை காங்கிரஸ், அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். தமிழக அரசு உள்ளாட்சிகள் தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும், கவுன்சிலர்களுக்கு போட்டிகள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு மற்ற மாநகராட்சிகளில் நடத்தப்பட்டது. ஆனால் ஈரோடு மாநகராட்சியில் போட்டிகளும் நடத்தவில்லை. மாநகராட்சி கூட்டத்தையும் முறையாக நடத்துவதில்லை என்பதால் புறக்கணிப்பு செய்ததாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

 


Page 333 of 841