Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உள்ளாட்சி தின விழாவில் ரூ1.12 கோடியில் நல திட்ட உதவிகள் மத்திய அமைச்சர் வழங்கினார்

Print PDF

தினகரன்                02.11.2010

உள்ளாட்சி தின விழாவில் ரூ1.12 கோடியில் நல திட்ட உதவிகள் மத்திய அமைச்சர் வழங்கினார்

ஊட்டி, நவ. 2: ஊட்டியில் நடந்த உள்ளாட்சி தின விழாவில் 714 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 12 லட்சத்து 32 ஆயிரத்து 623 மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

ஊட்டி அண்ணா கலையரங்கில் உள்ளாட்சி தின விழா மற்றும் நகராட்சி பூங்காக்கள் திறப்பு விழா நடந் தது. நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, முன்னாள் அரசு கொறடா முபாரக், எம்.எல்..க்கள் சவுந்திரபாண்டியன், கோபாலன், துணை தலைவர் ரவிக்குமார், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் இளங்கோ, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்து பேசியதாவது:

கடந்த 4 ஆண்டாக நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தின விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனைத்து அனைத்து விதமான

அதிகாரங்கள் மற்றும் நிதிகள் வழங்குவதிலும் தமிழகமே முன்னோடியாக உள்ளது.

சில உள்ளாட்சி அமைப்புக்களில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றினாலும், தொடர்ந்து அதனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதில்லை. எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்வதிலும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தங்களுடைய அதிகாரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

ஊட்டியில் நகராட்சி சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இரு புதிய பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ரூ.1 கோடியே 12 லட்சத்து 32 ஆயிரத்து 623 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது:தமிழகம் சிறந்த முதல்வரை பெற்றுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 1989ம் ஆண்டில் தான் சுய உதவிக்குழு துவக்கப்ப்டடது. கலைஞர் ஆட்சியில் தான்பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு சுழல்நிதி மற்றும் வங்கி கடன் உதவி வழங்கி பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது கலைஞர் தனது வாக்குறுதியில் தெரிவித்ததை விட பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துவிட்டார். குறிப்பாக கலைஞர் காப்பீடு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், ரூ.1க்கு அரிசி மற்றும் இலவச கலர் டிவி போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தகரம் மற்றும் பிளாஸ்டிக் வேய்ந்த குடிசை வீடுகள் கான்கிரிட் வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஊட்டியில் மின் மயானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக திகழ என்றும் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு மத்திய அமைச்சர் ராசா பேசினார்.

 

உள்ளாட்சி தினவிழா நகராட்சியில் கோலாகலம்

Print PDF

தினகரன்               02.11.2010

உள்ளாட்சி தினவிழா நகராட்சியில் கோலாகலம்

பொள்ளாச்சி, நவ. 2: பொள் ளாச்சி நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நகராட்சித் தலைவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழகம் முழுவதிலும் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் தேதியன்று உள்ளா ட்சி தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி கோவை மாவட் டம் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் உள்ளாட்சி தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகாலிங்கபுரம் பகுதியில் இருந்து நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்,எல்.. முன்னிலை வகித்தார்.

இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகளிர் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவிகளும் நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி வழங்கினார். நகரம் முழுவதிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள்தோறும் வழங்கும் திட்டத்தை முன்னாள் எம்.எல்.. ராஜூ துவக்கி வைத்தார். நகர பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ள புதிய சாலை மேம்பாட்டு திட்டம், நாச்சிமுக்கு மகப்பேறு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கு, காந்தி வாரச்சந்தை அருகே கட்டி முடிக்கப்பட்ட ஆடுவதைக் கூடம் ஆகியவற்றை நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் திறந்து வைத்தார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமும் நடத்தப்பட்டது.

இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகளிர் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவிகளும் நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி வழங்கினார். நகரம் முழுவதிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள்தோறும் வழங்கும் திட்டத்தை முன்னாள் எம்.எல்.. ராஜூ துவக்கி வைத்தார். நகர பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ள புதிய சாலை மேம்பாட்டு திட்டம், நாச்சிமுக்கு மகப்பேறு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கு, காந்தி வாரச்சந்தை அருகே கட்டி முடிக்கப்பட்ட ஆடுவதைக் கூடம் ஆகியவற்றை நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் திறந்து வைத்தார். தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமும் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் நகராட்சி பொறியாளர் மோகன், நகரமைப்பு அலுவலர் வரதராஜன், நகர் நல அலுவலர் குணசேகரன், கவுன்சிலர்கள் கவுதமன், கண்ணன், மணிகண்டன், ரங்கநாதன், ராதா, லிங்கபாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

4 ஆண்டுகளில் மாநகராட்சி சாதனை

Print PDF

தினகரன்           02.11.2010

4 ஆண்டுகளில் மாநகராட்சி சாதனை

கோவை, நவ.2: மாநகராட்சி நிர்வாகம் நான்கு ஆண்டுகளில் பெரிய திட்டப்பணி களை நடத்தி சாதனை ப டைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா நேற்று நடந்தது. முன்னதாக மாவட்ட கலெ க்டர் அலுவலகத்திலிருந்து மாநகராட்சி நோக்கி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் மேயர் வெ ங்கடாசலம் கலந்து கொண் டு பேசுகையில், "க டந்த 4 ஆண்டுகளில் கோ வை மாநகராட்சி நிர் வாகம் நல் ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. செம்மொழி மா நாட்டிற்காக 300 கோடி ரூபாய் திட்டப்பணி வேக மாக முடிந்தது. திட்ட சா லை பணிகளை வெகுவா க நிறைவேற்றியிருக்கிறோம்.

 மத்திய சிறையை வெள்ளலூருக்கு மாற்றவேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்காக மாநகராட்சி நிர் வாகம் 75 ஏக்கர் நில த்தை வெள்ளலூரில் ஒதுக்கப்பட்டது. இதற்கு மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. கட்சி பாகுபாடு இல்லாமல் திட்ட பணி நட த்தப்பட்ட து"என்றார். 1397776754 ணை மேயர் கார்த்திக் பேசு கையில், "மாநகராட்சி சார்பில் 377.17 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணி, 113.74 கோடி ரூபாய் செலவில் பில்லூர் 2வது குடிநீர் திட்டம், 96.50 கோடி ரூபாய் செலவில் திட க்கழிவு மேலாண்மை திட்டம், குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டம், 127 கோடி ரூபாய் செலவில் குளங்களை மேம்படுத்தும் திட்டம் என பல்வே று திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பில்லூர் 2வது குடிநீர் திட்டம் மூலம் மாநகராட்சியில் கிழக்கு, வட க்கு மண்டல பகுதியில் குடி நீர் பிரச்னை தீர்க்கப்படும். மாநகரில் 4 ஆண்டு நடந்த பணிகளை மக்கள் திருப்தியடைந்துள்ளனர். கோவை நகரில் அடிப்படை வசதிகள் வெகு வேகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிசைகள் மாறி, கான்கிரீட் வீடுகளாகி வருகிறது, " என்றார்.இதில் துணை கமிஷனர் பிரபாகரன், மேற்பார்வை பொறியாளர் பூபதி, செயற்பொறியாளர்கள் சுகுமார், லட்சுமணன், கணேஷ்வரன், தெற்கு மண்டல தலைவர் பைந்தமிழ், எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார், கவுன்சிலர்கள் நாச்சிமுத்து, தமிழ்செல்வி, மீனா, ராஜேந்திரபிரபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 334 of 841