Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருட்களை விற்க சிதம்பரம் நகராட்சி தடை விதிப்பு

Print PDF

தினமலர் 17.05.2010

பிளாஸ்டிக் பொருட்களை விற்க சிதம்பரம் நகராட்சி தடை விதிப்பு

சிதம்பரம் : சிதம்பரம் நகர பகுதியில் 20 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது குறித்து சிதம்பரம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மாரியப்பன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: சிதம்பரம் நகர மன்ற தீர்மானத்தின்படி மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பை, தட்டு, கப், டம்ளர், மேஜை விரிப்பு மற்றும் உணவு விடுதியில் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தக்கூடாது. அத்துடன் 20 மைக் ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட் டுள்ளது. எனவே காகிதம் உள்ளிட்ட மாற்று பொருட் களை மட்டும் பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி பயன்படுத்தினால் அவை நகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு செய்தி குறிப் பில் கூறப்பட்டுள்ளது.