தினமலர் 01.06.2010
பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு சீல்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிளாஸ்டிக் கேரி பேக் விற்பனைக்கு வைத்திருந்த பிரபல நிறுவனம் மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி சீல் வைக்கப்பட்டது. நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல வணிக நிறுவனத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் எச்சரித்தும் அந்த நிறுவனம் தொடர்ந்து பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்தி வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி நாகர்கோவில் ஆர்.டி.ஓ. நாடராஜன், தாசில்தார் நாகராஜன், நகராட்சி கமிஷன் ஜானகி, நகர் நல அதிகாரி போஸ்கோ ராஜன் மற்றும் அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையின்போது அந்த கடையில் 79.85 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக், 3 கிலோ பிளாஸ்டிக் கப் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர