Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டீ கடைகளில் பிளாஸ்டிக் கப் பயன்படுத்த கூடாது நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க மக்களுக்கு வேண்டுகோள்

Print PDF

தினகரன் 03.06.2010

டீ கடைகளில் பிளாஸ்டிக் கப் பயன்படுத்த கூடாது நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க மக்களுக்கு வேண்டுகோள்

கரூர், ஜூன் 3: கரூரில், டீ கடைகளில் பிளாஸ்டிக் கப் பயன்படுத்த கூடாது. நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மக்களுக்கு நகராட்சி தலைவி வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து கரூர் நகரா ட்சி தலைவி சிவகாமசுந்தரி கூறுகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. 50வகையான பிளா ஸ்டிக் பொருட்களை தின மும் நாம் பயன்படுத்துகி றோம். 20மைக்ரான்களுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே மீண்டும் பிளாஸ்டிக் பொரு ட்களாக உருக்கி பயன்படுத்த முடியும். எனவே, 20 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள், டீ கப்புகள் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது.

தூக்கி வீசப்படும் பிளா ஸ்டிக் பொருட்களினால் பல்வேறு சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. மழைநீர் சேகரிக்க முடிவதில்லை. நிலத்தடிநீர் அடைபடுகிறது. சாக்கடைகள் அடைப்பு ஏற்படுத்துகின்றன. இதனால், கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கப்கள் பயன்படுத்த தடை விதித்து கடந்த மாதம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் கப்களை அகற்ற கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பிறகும் நகராட்சி உத்தரவை மீறி சில இடங்களில் டீக்கடைகள், விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக் கப், கேரி பேக்குகள் பயன்படுத்துவதை கண்டறிந்து இவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல் கண்ணாடி டம்ளர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கடைக்காரார்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண் டும். மீறி பயன்படுத்தினால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் என்றார்.

எனவே, பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்.