Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தண்ணீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசு சர்வதேச மாநாடு

Print PDF

தினமணி 28.07.2010

தண்ணீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசு சர்வதேச மாநாடு

பெங்களூர், ஜூலை 27: தண்ணீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசு, சுகாதாரம் குறித்த சர்வதேச மாநாடு பெங்களூர் சென்ட்ரல் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை துவங்குகிறது.

இதை ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பெங்களூர் பல்கலைக்கழக துணை வேந்தர் என். பிரபுதேவ் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்போது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி விலங்கியல் துறை சார்பில் பெங்களூர் ஞானஜோதி கலையரங்கில் வரும் 29 முதல் 31-ம் தேதி வரை சர்வதேச மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாட்டை ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் தொடங்கி வைத்து மாநாட்டு மலரை வெளியிடுகிறார். உயர்கல்வித் துறை அமைச்சர் அரவிந்த லிம்பாவளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

வேளாண் அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.வி.தேவராஜ் கெüரவ விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இனத்தின் நலனுக்காக தண்ணீரையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது, காலநிலை, உணவுப் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. திட்டங்கள் தீட்டப்படுகிறது.

புதிய திட்டங்கள், யோசனைகள் மற்றும் ஆய்வறிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிவைத்து அவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோருவோம். 17 வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் 22 மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரும் பேர் பங்கேற்கின்றனர். பல்வேறு தலைப்புகளில் 400 பேர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர் என்றார் அவர்.