Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழை பெய்தால் மட்டுமே தீர்வு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 8வது நாளாக புகைமூட்டம்

Print PDF

தினகரன் 04.08.2010

மழை பெய்தால் மட்டுமே தீர்வு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 8வது நாளாக புகைமூட்டம்

நெல்லை, ஆக.4:ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கில் பிடித்த தீயை அணைக்க 8 தினங்களாக தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். மாநகராட்சி தற்போது மாற்று இடத்தில் குப் பையை கொட்டுவதற்கும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராமையன்பட்டி பஞ்சாயத்தின் அனுமதி இல்லாமலேயே கடந்த 10 ஆண்டு காலமாக நெல்லை மாநகராட்சி அங்கு குப்பை களை கொட்டி வந்தது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் கொட்டப்பட்ட மாடு, கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவற்றால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிய தோடு, அருகிலுள்ள குளங்களும் மாசுப்பட்டுவந்தன. இந்த குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறிய ஈக்கள், கொசுக்களால் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சுகா தார சீர்கேடுகள் அதிகரித்தன. இதை கண்டித்து கடந்த சில ஆண்டுகளாக ராமையன்பட்டி மக்கள் போராடி யும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி குப்பை கிடங்கில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகத்தால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பரவிய பின்னரே, குப்பை கிடங்கில் தீப்பிடித்த விபரம் தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருந்து 12 தீயணைப்பு வாகனங்கள் களத்தில் இறங்கியும், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து 3 தினங்கள் போராடி தீய ணைப்பு துறையினர் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படாதவாறு தடுத்தனர்.நேற்றோடு 8 தினங்கள் முடிவடையும் நிலையில், புகை மண்டலம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. கிடங் கின் வெளிப்பகுதிகளில் மட்டுமே தீய ணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ள தீயணைப்பு துறையினர், மழை பெய் தால் மட்டுமே பணிகள் முழுமை பெறும் என்கின்றனர். பாளை, பேட்டை, நான்கு நேரி ஆகிய 3 தீய ணைப்பு நிலைய வாகனங் கள் மட்டுமே தற்போது தீயை அணைக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளன.

நெல்லை மாநகராட்சி கடந்த ஒரு வார காலமாக குப்பைகளை சீவலப்பேரி சாலையில் உள்ள பழைய குப்பை கிடங்கில் கொட்டி வருகிறது. அங்குள்ள குப்பைகளும் சாலை ஒரத்தில் கொட்டப்படுவதால், கேடிசி நகர் வரை துர் நாற்றம் வீசுகிறது.

மேலும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பேப்பர் கள் ஆங்காங்கே பறப்ப தால் பொது மக்கள் அங்கு குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீண்டும் குப் பைகளை ராமையன்பட்டி கொண்டு சென்றால் அப்ப குதி மக்கள் போராட தயா ராக உள்ள நிலையில், குப் பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை இனிமேலாவது செயல்படுத்த முன்வரவேண்டும்.

தண்ணீர் தட்டுப்பாடு

குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு துறை வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர் தேவையாக உள்ளது. ஆனால் மாநகராட்சி சார்பில் தற்போது 10 டேங்க் தண்ணீர் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு டேங்கில் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பிடிக்க முடியும். தாமிரபரணி ஆறு மற்றும் குளங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் தண்ணீர் எடுத்தால், ஒரு முறைக்கு 14 லிட்டர் டீசலை செலவிட வேண்டும். இதற்கு ஆகும் செலவுகள் தீயணைப்பு துறையினரை தலைசுற்ற வைக்கிறது.

மாற்று இடத்தில் குப்பை கொட்டவும் எதிர்ப்பு

நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கில் கடந்த 27ம் தேதி பிடித்த தீயால் 8 நாட்களுக்கு பிறகும் அங்கு புகை மூட்டம் ஓயவில்லை. மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும் என தீயணைப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.