தினமணி 13.08.2010
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ| 6 ஆயிரம் அபராதம்
திருப்பூர், ஆக. 12: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றதாக, திருப்பூரில் 4 கடைகளுக்கு தலா | 1,500 வீதம் | 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்பனையைப்க் தடுக்க மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் திருப்பூர் மாநகரட்க் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். பழைய பஸ்நிலையம் எதிரிலுள்ள தினசரி மார்க்கெட், கேஎஸ்சி. பள்ளி சாலை, மங்கலம் சாலை, ஏபிடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தவிர, சுகாதாரமற்ற தின்பண்டங்கள், காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்த கடைகளில் இருந்து உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பொதுசுகாதார சட்டத்தின் படி அக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சுமார் 25 கடைகளில் நடத்தப்பட்ட இச் சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற 4 கடைகளுக்கு தலா |ரூ 1,500 வீதம் ரூ| 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இச் சோதனையில், ஆய்வாளர்கள் வெங்கடேஷ், ராமசாமி, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்