தினமலர் 27.08.2010
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்
திருச்சி: திருச்சியில் தனியார் அமைப்பு சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேயர் துவக்கி வைத்தார். "இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப்' சார்பில், பிளாஸ்டிக் ஒழி ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மாநகராட்சி முன் நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை வகித்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். கமிஷனர் பால்சாமி, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், மாணவ, மாணவியர் பங் கேற்றனர். விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்ட து; விழிப்புணர்வு வாசகம் அட ங்கிய தட்டி ஏந்திச் சென்றனர்.