Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

களியக்காவிளையில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை

Print PDF

தினமணி 09.09.2010

களியக்காவிளையில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை

களியக்காவிளை, செப். 8: களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

திருத்துவபுரம் முதல் களியக்காவிளை வரை உள்ள கடைகளில் இச் சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயமுருகன் முன்னிலையில், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) இரா. சுருளிவேல் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதில், தடையை மீறி பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ரூ 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.

இப் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தொடரும். எனவே, வணிகர்கள் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.