Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் "பை' களுக்கு திடீர் தடை

Print PDF

தினமலர் 07.10.2010

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் "பை' களுக்கு திடீர் தடை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடக்கிறது. கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க தடை விதிக்கும் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு புதிய மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடக்கிறது. கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் தூத்துக்குடியில் 20 கோடியில் போடப்பட உள்ள ரோடுகளை சீரமைக்க டெண்டர் முடிவு செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 20 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்தல் மற்றும் உற்பத்தி செய்ய தடை விதிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

Last Updated on Thursday, 07 October 2010 07:48