Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடியில் பாலிதீன் பைகளுக்கு தடை

Print PDF

தினமலர் 08.10.2010

தூத்துக்குடியில் பாலிதீன் பைகளுக்கு தடை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாலிதீன் பைகள் விற்பனை, உபயோகத்திற்கு தடை விதித்து, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம், நேற்று மேயர் கஸ்தூரி தங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, மாநகராட்சி எல்லைக்குள் 20 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பாலிதீன் பைகள் விற்பனை செய்ய, உபயோகிக்க தடைவிதிப்பது, மீறுவோருக்கு அபராதம் விதிப்பது, பராமரிப்பின்றி உள்ள வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற, ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரையின் நினைவுப்பூங்கா பராமரிப்பு பணியை தனியாரிடம் விடுவது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.