Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மங்களூரில் பிளாஸ்டிக் உபயோகம் குறைக்க திட்டம்

Print PDF

தினகரன் 13.10.2010

மங்களூரில் பிளாஸ்டிக் உபயோகம் குறைக்க திட்டம்

மங்களூர், அக்.13: மங்களூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை குறைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மங்களூர் மாநகராட்சி கமிஷனர் விஜயபிரகாஷ் இதுகுறித்து கூறுகையில், பிளாஸ்டிக் உபயோகம் எல்லா துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அதற்கு தடை விதிக்கப்படுவதை படிப்படியாக அமலாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் உபயோகத்தை குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பையின் விலை ரூ.3ஆகும். இப்பைகளை உபயோகிக்குமாறு மாநகராட்சி மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.