Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: நகராட்சி ஆணையர் நடவடிக்கை

Print PDF

தினமணி                         28.10.2010

பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: நகராட்சி ஆணையர் நடவடிக்கை

பெரியகுளம், அக். 27:பெரியகுளம் நகரில் கடைகளில் விற்பனைச் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி ஆணையர் ஜி.அசோக்குமார் பறிமுதல் செய்தார்.

பெரியகுளம் நகராட்சி ஆணையர் தலைமையில் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கும், விற்பனைச் செய்வதற்கும் தடைவிதிப்பது என்றும், மீறி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நகராட்சி ஆணையர் ஜி.அசோக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.அகமது கபீர், டி.ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் கடைகளில் இருந்த 50 கிலோ கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பொருள்களை விற்பனைச் செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.