Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் நகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினகரன்                   09.11.2010

பெங்களூர் நகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மாநகராட்சி கமிஷனர் தகவல்

பெங¢களூர், நவ. 9:பெங்களூரில் பாலித்தீன் பைகளின் புழக்கத்திற்கு தடைவிதிக்க ஆலோசனை நடந்துருவதாக மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா தெரிவித்தார்.

திடக்கழிவு மேலாண்மை குறித்து பெங்களூர் மாநகராட்சியுடன் அமெரிக்காவின் சான்பிரான்ஸ்சிஸ்கோ மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. 2009ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை முதல்வர் எடியூரப்பா ஏற்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து அவ்வப்போது பெங்களூருக்கு சான்பிரான்ஸ்சிஸ்கோ மாநகராட்சியின் அதிகாரிகள் வந்து திடக்கழிவு மேலாண்மை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்துவருகின்றனர். இதேபோல நேற்றும் பெங்களூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சான்பிரான்ஸ்சிஸ்கோ மாநகராட்சியின் மறுசுழற்சி முறை மேலாளர் ராபர்ட் ஹாலி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி இயக்குநர் டாமர் சுர்டிவிஜ் ஆகியோர் வந்திருந்தனர்.

இதன்பிறகு பேசிய மேயர் நடராஜ் "திடக்கழிவு மேலாண்மையில் நமது மாநிலம் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் சிறப்பாக செய ல்படுகிறது. அந்நாட்டில் வீடுகளில் இருந்து கழிவுக ளை கொட்டும்போதே திட க்கழிவுகள் தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. இதுபோன்ற திட்டத்தைக் செய ல்படு¢த்தினால் சுற்றுச்சூழல் சீர்கெடுவது தடுக்கப்படும். பெங்களூரிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத் தை செயல்படுத்துவது குறித்து கருத்து பரிமாற்றம் செய்துகொண்டோம்" என்றார்.

மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா கூறும்போது "திடக்கழிவுகளால் சுற்றுச்சூழல் சீர்கெடுவதை தடுப்பதற்காக பெங்களூரிலுள்ள ஷாப்பிங் மால்கள், வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கேரி பேக் எனப்படும் பால த்தீன் பைகளில் பொருட்களை அடைத்துக் கொடுப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளோம். பெங்களூர் முழுவதிலும் அனைத் 1397776754 பகுதிகளிலும் இந்த வகை பாலத்தீன் பைகளை தடை செய்ய ஆலோசனை நடந்துவருகிறது. முதல்கட்டமாக மால்களில் இதற்கான உத்தரவை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு படிப்படியாக பெங்களூர் நகரம் முழுவதிலும் பாலத்தீன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும்" என்றார்.