தினமலர் 10.11.2010
எழுமலையில் பிளாஸ்டிக் தடை
மதுரை : ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், கவர்கள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல், எழுமலை பேரூராட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இப்பேரூராட்சி பகுதி தொழில் மற்றும் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில், இன்று முதல் அமல்படுத்த ஆதரவளிக்கப்பட்டது. துண்டு பிரசுரங்கள், அறிவிப்பு பலகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல், மதுரை மாவட்டத்தில் பிற பேரூராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.