Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புவி வெப்பத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட 9 மாநகராட்சிகளில் பசுமை திட்டம்

Print PDF

தினகரன்                 16.11.2010

புவி வெப்பத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட 9 மாநகராட்சிகளில் பசுமை திட்டம்

கோவை, நவ 16: நகரமயமாக்கல், புவி வெப்பமடைதல் போன்ற காரணங்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கோவை உட்பட தமிழகத்தின் 9 மாநகராட்சி பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் பசுமை திட்டம் செயப்படுத்தப்படவுள்ளது.

ஒரு நகரின் மொத்த புவியியல் பரப்பில் 20 முதல் 30 சதவீதம் பசுமை நிறைந்ததாக இருந்தால் மட்டுமே அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரம், சுகதாரம் மேம்பட்டதாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. தற்போது காடுகள் அழிப்பு, தொழிற்சாலை மற்றும் வாகனங்கள் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பால் புவி வெப்பமடைந்து வருகிறது.

மத்திய நகர்ப்புற அமைச்சகம் நடத்திய ஆய்வில் பெரும்பாலான முன்னணி நகரங்களின் வாழ்க்கை தரம் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவுகோலுக்கு குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் நகரமயமாக்கல், புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நகரங்களை பசுமையாக்கும் திட்டம்(கிரீனிங் ஆப் சிட்டீஸ்) செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 9 மாநகராட்சி பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல் கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தனியார் கன்சல்டிங் நிறுவனங்களை கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், "மாநகரங்களை பசுமையாக்கும் திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும். மரம் வளர்ப்பு மட்டுமில்லாமல், நகரை பொலிவூட்டக்கூடிய தாவரவியல் பூங்காக்கள், பூந்தோட்டம் ஏற்படுத்துதல், சிறு குளங்கள் அமைத்து தாமரை, வாத்து வளர்ப்பு, குழந்தைகளுக்கு என தனி பூங்காக்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள நீர் நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நகரங்களை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் ஆலோசனை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் ஆலோசனை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்," என்றனர்.