Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆண்டிபட்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக்கிற்கு தடை

Print PDF

தினமலர்            23.11.2010

ஆண்டிபட்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக்கிற்கு தடை

ஆண்டிபட்டி : ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் தடை விதித்து பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் காசிராஜன், நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கடைகளில் பயன்படுத்த கூடாது என்றும் மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.மீறினால் உற்பத்தியாளர்களுக்கு 5000 ரூபாய், மொத்த விற்பனையாளர்களுக்கு 2500 ரூபாய், சில்லரை விற்பனையாளர்களுக்கு 750 ரூபாய், உபயோகிப்பவர்களுக்கு 100 ரூபாய் அபராத தொகை விதிக்கப்படும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.