தினகரன் 26.11.2010
பிளாஸ்டிக் பைகள் விற்க புதிய நிபந்தனை அதிகாரிகள் அதிரடி உத்தரவு
குன்னூர், நவ. 26: பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்கள் அதன் எடையை கம்ப்யூட்டரில் அச்சிட்ட பின்னரே விற்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குன்னூர் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டதை தொடர்ந்து, குன்னூர் நகரா ட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் பூமாலை, செந்தில், குமார், ஞானசேகர் மற்றும் நகர அமைப்பு ஆய்வாளர் சுகுமார் ஆகி யோர் கடந்த 2 நாட்களாக மவுண்ட் ரோடு மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பிளா ஸ்டிக் பை தடுப்பு சோதனைகளில் ஈடுபட்டனர்.
இச்சோதனை யில் 4 கிலோ எடையுள்ள பிளா ஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.5500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சுற் றுலா நகரமான குன்னூரில் பிளா ஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மைக்ரான் அளவுள்ள பிளா ஸ்டிக் பைகள்தான் உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ள நிலையில் தொடர்ந்து பலர் தடைசெய்யப்பட்ட பிளா ஸ்டிக் பைகளை விற் பனை செய்து வருவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
இதேபோல் மார்க்கெட் பகுதிகளில் தரமற்ற பிளா ஸ்டிக் டப்பாக்களில் விற்கப்படும் ஊறுகாய் முற்றி லும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்பவர்கள் அதன் எடையை கம்யூட்டரில் அச்சிடப்பட்ட பிறகே விற்பனை செய்ய வேண்டும். மேலும் நாங்கள் காலாவதியான உணவுப் பண்டங்களை விற்பவர்களையும் கண்காணித்து வருகிறோம்.
மார்க்கெட் பகுதியில் உள்ள ஓடைகளில் அழுகிய மீன் மற்றும் கோழிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் கழிவு களை ஆள் நடமாட்டம் இல்லாத இட த்தில் போட உத்தரவிட்டுள்ளதாகக் கூறினர்.