Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பில் நெல்லை பின்தங்கியது குமரியில் முடிந்தது.... இங்கு முடியவில்லை தீவிரப்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

Print PDF

தினகரன்             13.12.2010

பிளாஸ்டிக் ஒழிப்பில் நெல்லை பின்தங்கியது குமரியில் முடிந்தது.... இங்கு முடியவில்லை தீவிரப்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

அய்.கோபால்சாமி

நெல்லை, டிச. 13: பிளாஸ்டிக் ஒழிப்பு போரை அனைத்து தென் மாவட்டங்களுக்கும் முன்னால் தொடங்கி பின்னால் நிற்கிறது நெல்லை. குமரியில் ஆறு மாதங்களில் முடிந்த பணி இங்கு இரு ஆண்டுகளாகியும் நடக்காத தற்கு நிர்வாகத்தின் மெத் தனப்போக்கே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர் வலர்கள் கருதுகின்றனர். மிகவும் சீர்கேட்டை உரு வாக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முனைப்புடன் செயல்படவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை கலெக்டராக பதவியேற்றதும் ஜெயராமன் துடிப்புடன் அறிவித்த திட்டம் பிளாஸ்டிக் ஒழிப்பு. ஆனால் தொடங்கிய வேகத் திலேயே துவண்டு போனார். அவர் அறிவிப்பு விடுத்ததும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் கடைகள், ஓட்டல்களில் பதுங்கின. ‘புலி வருதுகதையாக கடும் நடவடிக்கையை எதிர் பார்த்து கடைக்காரர்கள் ஏமாந்ததால், பிளாஸ்டிக் வேதாளம் மீண்டும் கடை யேறியது.

சில நாட்களிலேயே திட்டத்தை கலெக்டரும் அதிகாரிகளும் மறந்து போயினர். சிலர் நினை வூட்டிய போது பிளாஸ் டிக்கை முற்றிலும் ஒழிக்கும் உள்ளாட்சி அமைப்புக்கு பரிசு வழங்குவதாகவும், பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக காகித பை உற்பத்திக்கு உதவப்போவதாகவும் கூறி னார். ஆனால் ஒன்றும் செயல்படுத்தப் பட வில்லை.

ஆனால், நெல்லையை அடுத்து இத்திட்டத்தை அறிவித்த கன்னியாகுமரி கலெக்டர் ராஜேந்திர ரத்னூ ஆறே மாதங்களுக்குள் கச்சிதமாக நிறைவேற்றி னார். பிளாஸ்டிக் ஒழிப்பில் உள்ளாட்சி அமைப்புகளை முழுமூச்சாக பயன்படுத்தி னார். அதிகாரிகள் கூட தங்கள் கைப்பையில் துணிப்பை வைக்கவேண் டும் என உத்தரவிட்டார். வணிகர் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை உதாசீனப்படுத்தினார். எந்த விழாவுக்கு சென்றாலும் அந்த விழாவுடன் பிளாஸ் டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். திடீர் ஆய்வு கள், அதிரடி சோதனைகள் மூலம் கடைக்காரர்கள், அலுவலர்களை எப்போதும் ஆயத்த நிலையிலேயே வைத்திருந்தார்.

இத்தகைய எந்த முயற்சி யையும் மேற்கொள் ளாத தாலேயே நெல்லையில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவ டிக்கையில் பின்னடைவு

கண்துடைப்புக்காக சோதனை

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே பிளாஸ்டிக் கப்புகள், பைகள் தாராளமாக நடமாடுகின்றன. முக்கிய பிரமுகர் நடத்தும் ஓட்டலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை அறிவிக்கப்பட்ட காலத்தில் கூட நிறுத்தப்படாமல் இன்னமும் தொடர்கிறது. கண்துடைப்புக்காக ஓட்டல்கள், கடைகளில் சோதனை நடத்தும் அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்புக்காக முழுமனதுடன் சோதனைகள், ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை.

ஏற்பட்டது. ஆரம்ப நிலையில் விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத் தாரே தவிர அதை தொட ராமல் விட்டுவிட்டார். பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச் சிக்கு அழைத்தால் தான் உடனடியாக கலந்து கொள்வதாக அறிவித்தார். ஆனால் அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பு நிர்வாகத்துக்கு உண்டு என்பதை உணர தவறிவிட்டார். 20 மைக் ரானுக்கு குறைந்த பிளாஸ் டிக்கை பயன்படுத்தக் கூடாது என்ற அளவிலேயே உத்தரவு இருந்தது. அனைத்து பிளாஸ்டிக் பைகளையும் தவிர்க்கும் உறுதிப்பாடு இல்லை.

உள்ளாட்சி அதிகாரிகள், அமைப்புகள், மகளிர் குழுக்கள், தொண்டு நிறு வனங்கள் மூலம் செயல் பாட்டை தீவிரப்படுத்த எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் அவற்றை பரீட்சித்தும் பார்க்க வில்லை. பிளாஸ்டிக் ஒழிக்க வேண்டிய நச்சுப்பொருள் என்ற உறுதிப்பாடு அதி காரிகளிடமே இல்லை.

போதை பொருட்களை போல ஒழிக்கவேண்டிய பொருட்களில் பிளாஸ்டிக் ஒன்று என்பதை மாவட்ட நிர்வாகம் மறந்தாலும் மக்கள் மறக்க கூடாது. மனிதர்களை உள்ளுக்குள் ஊடுருவிக்கொல்லும் புற்றுநோய்க்கு பிளாஸ்டிக் தான் முக்கிய முகவர். மக் காத மாசு. பூவுலகில் விரைந்து பரவி மங்கி மறையாமல் ஆண்டாண்டு காலம் அழியாமல் நிலைக் கும் தேவையற்ற கழிவு.

பல வளர்ந்த நாடுகளில் ஒட்டுமொத்தமாக அது ஒழிக்கப்பட்டு விட்டது. விழிப்புணர்வுள்ள மக்கள் நிறைந்த நெல்லையிலும் அது நிச்சயம் நிறைவேறும். ஆனால், மாவட்ட நிர்வா கம் இதற்கு மனது வைக்க வேண்டும்.

Last Updated on Monday, 13 December 2010 08:14