Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் கவர்களுக்குத் தடை: வியாபாரிகளுக்கு முன்னறிவிப்புக் கூட்டம்

Print PDF

தினமணி              13.12.2010

பிளாஸ்டிக் கவர்களுக்குத் தடை: வியாபாரிகளுக்கு முன்னறிவிப்புக் கூட்டம்

திருப்பரங்குன்றம், டிச.12: பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள், கப்கள் உள்ளிட்ட பொருள்களை வருகிற ஜன. 1-ம் தேதியிலிருந்து தடை விதிப்பது சம்பந்தமாக வியாபாரிகளுக்கு முன்னறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. திருநகர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்பேரூராட்சித் தலைவர் கே.இந்திராகாந்தி தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் க.பழனிவேல் பேசுகையில் அரசு அறிவித்தன் பேரில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை மற்றும் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் பைகளில் வைத்து பொருள்கள் தரக்கூடாது என்றார்.

இதை மீறினால், வியாபாரிகளுக்கு ரூ 200, நுகர்வோருக்கு ரூ 100, மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும். கடைகளின் முன்பாக உள்ள தாழ்வாரங்களை நீளம் குறைவாக உபயோகிக்க வேண்டும். பொது சாக்கடைகளில் மூடி போடக் கூடாது எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.