Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருட்கள் எழுமலையில் அழிப்பு

Print PDF

தினமலர்          13.12.2010

பிளாஸ்டிக் பொருட்கள் எழுமலையில் அழிப்பு

எழுமலை: எழுமலை பகுதியில் தடைக்கு பின்னும், கடைகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.பேரூராட்சி தலைவர் பொன்னுத்தாய், துணை தலைவர் பக்ருதீன், நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரசாரம், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தொடங்கியது. இன்ஸ்பெக்டர் தினகரன் தொடங்கி வைத்தார். உள்ளாட்சி பிரதிநிதிகள், கடைகளில் சோதனையிட்டு, கேரி பேக்குகள், தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர். இச்சோதனைக்கு பின், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில், கேன்கள்மூலம் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர்வரிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும் என பேரூராட்சி சார்பில் மைக் மூலம் அறிவிக்கப்படுகிறது.