தினகரன் 14.12.2010
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வடமதுரை, டிச. 14: வடமதுரையில் பேரூராட்சி சார்பாக, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் முத்துலட்சுமி அழகுமலை தலைமை வகித்தார். துணைத்தலைவர் கார்த்திகேயன், செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
கலைமகள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பிளாஸ்டிக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென் உள்ளன. பிளாஸ்டிக் மண்ணில் மக்காமல் இருப்பதால் மண்வளம் கெட்டு மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பில் பயன்படும் காட்மியம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதும், விஷத்தன்மை கொண்டதும் ஆகும் என்பது உள்ளிட்ட கோஷங் களை முழங்கியபடி சென்றனர்.ஆர்எஸ்.ரோட் டில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியே பேரூராட்சியை வந்தடைந்தது.