தினமலர் 26.07.2012
பிளாஸ்டிக்' ஒழிப்பு நடவடிக்கைக்கு வியாபாரிகள் ஆதரவு
கூடலூர்:"தேவர்சோலை நகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்,' என வியாபாரிகள் உறுதியளித்துள்ளனர்.கூடலூர் தேவர்சோலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்து பேசுகையில்,""நாம் பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் கழிவுகளால் மண்ணுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பல்வேறு பாதிகள் ஏற்படுகிறது.
இதன் பயன்பாட்டை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் பாதிப்பை பாதுகாத்து நம்மையும் காத்துகொள்ள முடியும். பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பொதுமக்கள் வியாபாரிகளும் ஒத்தழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார். இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக வியாபாரிகள் உறுதியளித்தனர். கூட்டத்தில், துணை தலைவர் வேலாயுதம் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் சபியா தலைமை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், வியாபாரி சங்க தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.