தினமலர் 26.07.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
வேலாயுதம்பாளையம்: புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் காந்தி திருமண மண்டப்பத்தில் நடந்தது.
கூட்டத்தில் 40 மைக்கிரான் அளவு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து டவுன் பஞ்சாயத்து தலைவர் லலிதா விளக்கம் அளித்து பேசினார். துணைத்தலைவர் கவுசல்யாதேவி, செயல் அலுவலர் சுப்ரமணியம், வியாபாரிகள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.