Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருங்குளம் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை வெளியீடு

Print PDF
தினமலர்       26.07.2012   

பெருங்குளம் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை வெளியீடு

தூத்துக்குடி : பெருங்குளம் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டன. இனிமே ல் இதனை பயன்படுத்துவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நட ந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்டன.

தமிழகத்தில் மெல்லிய பிளாஸ்டிக் பைகளினால் மக்களுக்கு கடும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி இருப்பதால் அதனை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மெல்லிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இது சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெருங்குளம் டவு ன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை தடை செய்யும் அறிவிப்பு நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் வெளியிடப்பட்டது. செ ன்னை டவுன் பஞ்சாயத்துக்களின் இயக்குனர் சந்திரசேகரன் சுற்றறிக்கைப்படியும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் ஆய்வுக் கூட்ட அறிக்øயின் படி பெருங்கு ளம் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை முழுவதுமாக தவி ர்க்கும் வகையில் விழிப்புணர் வு கூட்டம் நேற்று டவன் பஞ்சாயத்து தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது.

சிறு வியாபாரிகள், பூக்க டை, காய்கறி கடைக்காரர்கள், திருமண மண்டபங்களை சேர் ந்தவர்கள் உள்ளிட்ட அனை த்து தரப்பினரும் கூட்டத்தில் பங்கேற்றனர். பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பெருங்குளம் டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி வெங்கடேசன் விளக்கினார். இதன் பயன்பாட்டை முழுமையாக நிறு த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெருங்கு ளம் டவுன் பஞ்சாயத்தில் பி ளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடை செய்யும் அறிவிப்பினை நிர்வாக அதிகாரி வெளியிட்டார். இதன் பிறகும் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தினால் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நிர்வாக அதிகாரி வெங்கடேசன் தெரிவித்தார். நிர்வாக அதிகாரி பேசி முடித்த பிறகு பெருங்குளம் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் முழுமையாக தடுப்பதற்கு நாங்கள் உறுதியளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அலுவலக உதவியாளர் அழகர் நன்றி கூறினார்.