தினமணி 27.07.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
துறையூர், ஜூலை 26: உப்பிலியபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மு. மல்லிகாஅர்ச்சுனன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் அ. மைவிழி முன்னிலை வகித்தார்.
உப்பிலியபுரத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகள், தேநீர் கடை, பூக்கடை, திருமண மண்டப உரிமையாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் 40 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், சீர்கேடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இதற்கு மாற்றாக, காகிதம், துணிகளால் ஆன பைகளை பயன்படுத்துமாறு வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.