Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அறந்தாங்கியில் பாலிதீன் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி               27.07.2012

அறந்தாங்கியில் பாலிதீன் பொருள்கள் பறிமுதல்

அறந்தாங்கி, ஜூலை 26: அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் 300 கிலா தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.றந்தாங்கி நகராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் அளவிற்குள்பட்ட பாலிதீன் பொருள்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடைகளில் தடையை மீறி, இந்தப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதாக நகராட்சி அலுவலர்களுக்கு வந்த தகவலின் பேரில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது, 300 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகள், 7 ஆயிரம் கப்புகள் ஆகியவற்றை உணவகங்கள் மற்றும் டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட கடைகளில் நகராட்சி அலுவலர்கள் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு ரூ. 25 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் பெரிய கடைகளுக்கு ரூ. 500, சிறிய கடைகளுக்கு ரூ. 100 என மொத்தம் ரூ. 3200 அபராதம் வசூலிக்கப்பட்டது.நகராட்சி ஆணையர் ப. அசோக்குமார், துப்புரவு அலுவலர் எஸ். சங்கரசபாபதி, துப்புரவு ஆய்வாளர்கள் சேகர், லெனின், மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.