Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி               28.07.2012

விழிப்புணர்வுப் பேரணி

பண்ருட்டி, ஜூலை 27: பண்ருட்டி நகராட்சி சார்பில் மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடத்தது. பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் பண்ருட்டி நகர பகுதியைச் சேர்ந்த 22 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தி மூக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை அடைந்தனர்.

 ஆணையர் உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் பி.குமார், ஆய்வாளர்கள் க.பாண்டியன், நா.திண்ணாயிரமூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள், ரோட்டரி, ரோட்ராக்ட், இன்னர்வீல், லயன், எக்ஸ்னோரா மற்றும் வியாபார சங்கத்தினர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.