தினமலர் 01.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி கலெக்டர் துவக்கி வைப்பு.
கரூர்: கரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெ ங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை கலெக்டர்
÷ஷாபனா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற கரூர் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர்.
நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் காளியப்பன், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் உமேஸ்வரி, மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் சம்பத்குமார், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் விசாகன், தானேஷ், லட்சுமண மூர்த்தி, தமிழரசி, கோபால கிருஷ்ணன் உள்பட பலர் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.