தினமலர் 01.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்த போட்டிகள் தொடக்க விழா நடந்தது.போட்டியை டவுன் பஞ்சாயத்து தலைவர் சரோஜா தொடங்கி வைத்தார். கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த அரசு பள்ளிகள், கோவக்குளம் அரசு நடுநிலைப்பள்ளி, பிச்சம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, கோவகுளம் கே.எஸ்.ஆர்.வி., மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பேர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் டவுன் பஞ்சாயத்து சார்பில் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் சசிக்குமார், செயல் அலுவலர் முகமது யூசுப் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.