தினமணி 01.08.2012
1,500 மரக்கன்றுகள் நட போளூர் பேரூராட்சி முடிவு
போளூர்,ஜூலை 31: போளூர் பேரூராட்சியில் 1,500 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பேரூராட்சித் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரசு மகளிர், ஆண்கள் பள்ளி வளாகங்கள், செல்லியம்மன் கோயில் தெரு, அல்லி நகர் குளம், ரயில்வே ஸ்டேஷன் பின்புறம், வசந்தம் நகர், கல்லறை, பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் இம்மரக்கன்றுகள் நடப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
செயல் அலுவலர் நிஷாத், துணைத் தலைவர் செல்வன், மன்ற உறுப்பினர்கள் பார்த்திபன், ராம்மோகன், சுந்தர், கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.