Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காகிதபுரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க முடிவு

Print PDF

தினமணி                    04.08.2012

காகிதபுரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க முடிவு

கரூர், ஆக. 3: கரூர் மாவட்டம், காகிதபுரம் பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க   விழிப்புணர்வு  நடவடிக்கைகளை  மேற்கொள்வதென முடிவு  செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்தப் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காகிதபுரம்  பேரூராட்சிப்  பகுதிகளில்  பிளாஸ்டிக்  பயன்பாட்டைத்  தவிர்க்க   விழிப்புணர்வு வாசகங்கள், விளம்பரங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை வீடுகள் மற்றும் கடைகளில் வைப்பது எனவும், மேலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு காகிதபுரம் பேரூராட்சித் தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பிரமணியம், செயல் அலுவலர் சௌந்திரநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் உறுப்பினர்கள் நீலாவதி, முருகையன், பொன்னுசாமி, சரசுவதி, செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.