தினகரன் 04.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
பவானிசாகர், : பவானிசாகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கவர், கப் மற்றும் விரிப்புகள் விற்பனை மற்றும் உயோகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சி நேற்று முன் தினம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பவானிசாகர் அரசு தொடக்கபள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை ,மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பேரூராட்சி தலைவர் வெங்கடாசலம், துணை தலைவர் செல்வம் ,செயல் அலுவலர் வில்லியம் யேசுதாஸ் மற்றும் கவுன்சிலர்கள் பரிசுகளை வழங்கினர்.