தினமலர் 06.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம்
சாயல்குடி:சாயல்குடியில் பிளாஸ்டிக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து குவியல் குவியலாக சேர்ந்து வருகிறது. அதில் தேங்கும் நீரில் கொடிய நோய்களை பரப்பக்கூடிய கொசுக்கள் உற்பத்தி ஏராளம்.இவ்வாறு பல வகையிலும் தீங்கை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், என பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் மத்தியாஸ் ஆகியோர் பொது மக்களிடம் பிரசாரம் செய்தனர். இளநிலை உதவியாளர் பாஸ்கரபூபதி உடனிருந்தார்.