தினமலர் 07.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
ஆனைமலை : ஆனைமலை பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மனித சங்கிலி மற்றும் ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் தலைமை வகித்தார். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து வணிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வணிகர் சங்க தலைவர்கள் மற்றும் வணிகர்களிடையே கலந்தாலோசிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆனைமலை பேரூராட்சி சார்பில் ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பொதுமக்களிடையை வலியுறுத்தப்பட்டது. ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலம் சென்றது. ஊர்வலம் முடிந்த பிறகு ஆனைமலை முக்கோணம் பகுதியில்; ஆனைமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 100 மாணவர்களும், காந்தி ஆசிரமம், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 300க்கும் அதிக மானவர்கள் கலந்து கொண்டு மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரூராட்சி துணைத் தலைவர் நாச்சிமுத்து, செயல் அலுவலர் கனகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.