தினமலர் 07.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி மாணவ, மாணவியர் பங்கேற்பு
குன்னூர் : "பிளாஸ்டிக் ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதால், ஜெகதளா பேரூராட்சி விரைவில் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாறும்,' என தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குன்னூர் ஜெகதளா பேரூராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணிக்கு தலைவர் உஷா தலைமை வகித்தார்.பேரணியில் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை பள்ளி, ஜெகதளா பள்ளி மாணவர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. "ஜெகதளா பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதால், விரைவில் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக ஜெகதளா திகழும்,' என பேரூராட்சி தலைவர் உஷா தெரிவித்தார்.