Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"பிளாஸ்டிக்' விழிப்புணர்வு

Print PDF

தினமலர்          07.08.2012

"பிளாஸ்டிக்' விழிப்புணர்வு

கூடலூர் : தேவர்சோலை நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி, மனித சங்கிலியாக நின்று, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூடலூர் தேவர்சோலை நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி தேவர்சோலை பேரூராட்சி சார்பில், நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணிக்கு பேரூராட்சி தலைவர் சபியாகோயா தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

பேரணியில், ஊராட்சி பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் எதிர்ப்பு போர்டுகளை கையில் ஏந்தி, கோஷங்களை எழுப்பினர். பேரணி, பஸ் ஸ்டாண்ட், ஊராட்சி துவக்கப்பள்ளி வழியாக சென்றனர். பின்னர், நகர சாலையில் மாணவ, மாணவியர் இணைந்து மனித சங்கிலியாக நின்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில், பேரூõட்சி துணை தலைவர் வேலாயுதம் மற்றும் கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் வேணு, ஊழியர்கள், தேவர்சோலை ஊராட்சி ஒன்றிய பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.