தினமலர் 08.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ரூர்: கம்பைநல்லூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்பிடுள்ளது.பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கியும்,பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.கம்பைநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை டவுன் பஞ்சாயத்து சேர்மன் தனசேகரன் துவக்கி வைத்தார்.பேரணி முக்கிய வீதிகள் வழியாக டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை அடைந்தது.துணைத்தலைவர் கிருஷ்ணன், செயல் அலுவலர் சாந்தி, இளநிலை உதவியாளர் வெங்கடாசலம், தலைமையாசிரியர் திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து சென்னை ஜெயபால் குழுவினரின் நாடகம் நடந்தது.