தினமலர் 08.08.2012
அரியப்பம்பாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி
சத்தியமங்கலம்: அரியப்பம்பாளையம் டவுன் பஞ்சாயத்து சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.இப்பஞ்சாயத்து பகுதியில், 40 மைக்கரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை, அரியப்பம்பாளையம் டவுன் பஞ்சாயத்து தலைவர் துரைசாமி துவக்கி வைத்தார்.செயல் அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ஈரோடு ரோடு வழியாக, புளியம்பட்டி பிரிவில் முடிந்தது.பேரணியில் பொதுமக்கள், டவுன் பஞ்சாயத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.