Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கீழ்குந்தா பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

Print PDF

தினமலர்                    08.08.2012

கீழ்குந்தா பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

மஞ்சூர் : கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கீழ்குந்தா பேரூராட்சி சார்பில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. மஞ்சூர் மேல்பஜாரில் துவங்கிய பேரணி, கீழ்பஜார், கீழ்குந்தா சாலை வழியாக சென்று மணிக்கல் மட்டத்தில் நிறைவடைந்தது. பேரணியில்,பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்து, பள்ளி மாணவர்கள் தட்டிகள் ஏந்தி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.இதில், கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் ஜெயா தலைமை வகித்தார். செயல் அலுவலர் மணிகண்டன், மஞ்சூர் நகர வியாபாரிகள் சங்க தலைவர் சிவபிரகாசம், அனைத்து கடைக்காரர்கள் சங்க தலைவர் ஆறுமுகம், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அசோகன், உதவி தலைமையாசிரியர் ஜெபராணி, பேரூராட்சி துணைத்தலைவர் போஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.