தினகரன் 08.08.2012
அவிநாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
அவிநாசி, : அவிநாசி பேரூராட்சி மற்றும் சேவா பாரதி தென்தமிழ்நாடு அமைப்பின் சார்பாக அவிநாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணியை பள்ளி தலைமையாசிரியர் சரவணபவன் துவக்கி வைத்தார். அவிநாசி பேரூராட்சி தலைவி ஜெகதாம்பாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ மகாலிங்கம், சேவா பாரதி வட்டார பொ றுப்பாளர் ஹரிஹரன், அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர்கள், நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி மற்று ம் உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ராயர் கல்வி நிலைய மாணவ மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கோவை மெயின் ரோடு, கிழக்கு ரத வீதி, கச்சேரி வீதி, சேயூர் ரோடு, வள்ளுவர் வீதி வழியாக பேரணி நடைபெற்றது. பேரணியில் பிளா ஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.