Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

Print PDF

தினமணி         08.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

செஞ்சி, ஆக. 7: செஞ்சியில் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி திங்கள்கிழமை நடைபெற்றது.

÷இதில் சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேடுகளை விளைவிக்க மூல காரணமாக விளங்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அறவே அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் செஞ்சி காந்தி பஜாரில் நடைபெற்றது.

÷மனித  சங்கிலியில்  எம்எல்ஏ  அ.கணேஷ்குமார் , பேரூராட்சித்  தலைவர்  செஞ்சி  மஸ்தான், பேரூராட்சி செயல்  அலுவலர்  நா. அன்பழகன்,   செஞ்சிக்கோட்டை  ரோட்டரி  சங்கத்  தலைவர் கே.ஜி.ரமேஷ்பாபு, முன்னாள் தலைவர் குறிஞ்சிவளவன், காந்தி சேவா சங்கத் தலைவர் ரமேஷ் பாபு, ஜெ.சி.ஐ. தலைவர் சௌகத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.