தினமலர் 09.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனை ட்டம் டந்தது.தெற்கு பிச்சாவரத்தில்மாணவர்களுக்கு பயிற்சிசிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண் துறை மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.ஊராட்சித் தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். வேளாண் துறை நான்காம் ஆண்டு மாணவர் சதீஷ்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜ்பிரவின் பயிற்சி குறித்து விளக்கிப்பேசினார்.தொடர்ந்து பிச்சாவரம் பகுதி விவசாயிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் விவசாயத் தொழிலில் ஏற்படும் பிரச்னைகள், நோய் தாக்கல், உரம் இடுதல், தண்ணீர் மேலாண்மை போன்றவை குறித்த சந்தேகங்களுக்கு பயிற்சி மாணவர்கள் பதில் அளித்தனர். தோட்டக்கலை மாணவர்கள் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்களை விவசாயிகள் சங்கச் செயலர் கண்ணன் வழங்கினார்.கவுன்சிலர் சாமிக்கண்ணு உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள், தோட்டக்கலை விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.