தினமலர் 09.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்
பண்ணைக்காடு : பண்ணைக்காடு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. நாற்பது சதவிகிதம் மைக்ரான் குறைவான பிளாஸ்டிக்கால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சுய உதவிக்குழுவினர், வியாபாரிகள், வர்த்தகர்கள், மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செயல் அலுவலர் வெங்கட்ரமணன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.