தினமலர் 09.08.2012
மகளிர் குழுக்களுக்கு அரசு உத்தரவு
தேவதானப்பட்டி: அனைத்து பேரூராட்சிகளிலும்,தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி, விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கிறது.பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, மகளிர்குழுக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கையை பாதிக்காத பொருட்களைபயன்படுத்த உறுதி மொழி எடுத்துக் கொள்ளவும் அரசு உத்திவிட்டுள்ளது.இது தொடர்பாக ஒவ்வொரு மகளிர்குழுவும், கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மகளிர் குழுக்கள் அமைந்துள்ள பகுதியில் முற்றிலும் ஒழிப்பதற்கு, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மகளிர் குழுக்கள் தீர்மானம் நிறைவேற்றி, பிரச்சாரம் செய்து அந்தந்த பேரூராட்சிகளில் அறிக்கை தரவேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.