Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி              11.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

தேவகோட்டை, ஆக. 10: தேவகோட்டையில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.தேவகோட்டை ஆர்ச் அருகில் துவங்கிய இப்பேரணிக்கு காரைக்குடி எம்.எல்.ஏ சோழன். சித. பழனிச்சாமி துவக்கி வைத்து தலைமையேற்று சென்றார்.பேரணி ஆர்ச் துவங்கி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக வந்து நகராட்சியை அடைந்தது.பேரணியில் சென்றவர்கள் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றனர்.

பேரணியில் நகர்மன்றத் தலைவி சுமித்ராரவிக்குமார், துணைத் தலைவர் சுந்தரலிங்கம், ஆணையர் பொறுப்பு செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் போஸ், கேசவன், கமலக்கண்ணன், பூக்கடை சரவணன், முத்தழகு, ரமேஷ், பாலா, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 11 August 2012 08:53