தினமலர் 12.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்
அவிநாசி : அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது.அவிநாசி பேரூராட்சி மற்றும் " ஹேண்ட் இன் ஹேண்ட்' சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு வீதி நாடகம் நடந்தது. பேரூராட்சி தலைவி ஜெகதாம்பாள் தலைமை வகித்தார்.துணை தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். திருச்சி பாரதி கலைக்குழுவினர்,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம், நாட்டியத்தை நடத்தினர்." ஹேண்ட் இன் ஹேண்ட்' நிறுவன பொறுப்பாளர் முத்து பேசுகையில், " வெப்பமயமாதல் காரணமாக, ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து வருகிறது.""பூமியில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் வெளியாகி, மனிதனுக்கு புற்றுநோயையும், ஓசோனில் ஓட்டையையும் ஏற்படுத்துகின்றன
."பிளாஸ்டிக் ஒழிப்புஎன்பது ஒவ்வொரு வீட்டில் இருந்தும் துவங்க வேண்டும். அதுவே உண்மையான விழிப்புணர்வு,'' என்றார்.