தினமலர் 14.08.2012
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
சிவகிரி:ராயகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சிவகிரி அருகேயுள்ள ராயகிரி டவுன் பஞ்.,கூட்டத்தில் டவுன் பஞ்.,களின் இயக்குனர் அறிவுறுத்தலின்படி 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ராயகிரி பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளுடன் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பின் மகளிர் சுயஉதவி குழுக்களுடன் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.இது தொடர்பாக மாணவர்களிடையே பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வார்டிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மனித சங்கிலி நடந்தது. தலைவர் ராமையா, செயல் அலுவலர் சுவாமிநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.