Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை பயன்படுத்தினால் அபராதம்

Print PDF

தினகரன்              17.08.2012

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை பயன்படுத்தினால் அபராதம்

உசிலம்பட்டி, : எழுமலை பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் எழுமலை பேரூராட்சி பகுதியில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தன.

இதையடுத்து, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிப்பது குறித்து சிறு வியாபாரிகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களின் உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர், கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவகலத்தில் நடந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீறி பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் சித்ராபாண்டியன், செயல் அலுவலர் கண்ணன், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் அலுவக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 17 August 2012 11:08